ஓர் அறிவு தோன்றி !
ஐந்தறிவு வந்தன எல்லாம் !
செல்லா இல்லம்.
கல்லுக்குள் நீராய் !
சொல்லுக்குள் நேராய் !
தலைமுறை தாண்டி வாழும் வெல்லம்!
வெள்ளத்தால் கொல்லாது !
பெரும் போரால் கோழையாகாது.
நிலநடுக்கத்தால் நடுக்காது!
வாழும் கொடை!!
நிறம் ! நிலம் ! பேதம் !
சாதி ! மத ! சாக்கடை உடைத்து !
நிலைத்த சமூகநிதி
சான் அளவும் தனக்காய் வாழாது!
வாழும் "குருதி கொடை "