தந்தை பெரியார் வகுத்த சமூக நீதிப் பாதையில் !
அறிஞர் அண்ணாவின் சமஉரிமை அரசியல் வழியில் . .
மாவட்டம் எங்கும் மருத்துவக்கல்லூரியாய்!
இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடே தொழிலிலும், மருத்துவத்திலும் முதலாய் . .
காலமெல்லாம் கலைஞர்!!
கடித இலக்கணமாய்! புதினங்களை புதுமையாய். தொல்காப்பிய பூங்காவாய்! தமிழுக்கு செம்மொழி தந்தவராய் !
காலமெல்லாம் கலைஞர்!!
மக்களிடம் தகவல் தெரிவிக்கும் தொலைக்காட்சியாய்!!
சமத்துவம் படைத்த சமத்துவபுரமாய்!!
உழவு செழிக்க செய்த உழவர் சந்தையாய்!!அமுது படைக்கும் திருக்குறள் உரையாய்!!
காலமெல்லாம் கலைஞர் . .
இனிக்கும் கவிதையாய்! மணக்கும் எழுத்தால்! சிறக்கும் பேச்சால்! வியக்கும் சிந்தனையால் !காலமெல்லாம் கலைஞர் . .
வள்ளுவர் கோட்டமாய்! வான்புகழ் வள்ளுவர் சிலையாய்!!ஆரியத்தை வென்ற சாணக்கியராய்!!கல்வியறிவை மக்களிடம் சேர்ந்த தமிழ் செம்மலாய்!!உடன்பிறப்பே எனும் ஒற்றைச் சொல்லால் மனம் கவர்ந்த காந்தமாய்!
காலமெல்லாம் கலைஞர் .
பெயருக்கு திட்டமில்லை
பெயர் சொல்லும் திட்டங்களாய்!!மக்களைக் கவர திட்டமில்லை மக்களை உயர்த்தவே திட்டம் என்றும் !!காலமெல்லாம் கலைஞர். .
நிலைத்த புகழாய் நீர் இருக்கிறீர் !!
சமநீதியாய், சமூகநீதியாய் நீர் இருக்கிறீர் !!
கருப்பு,சிவப்பு,நீலம் கலக்கும் மையமாய் நீர் இருக்கிறீர் !!திராவிட நெருப்பு ஊட்டும் குரலாய் நீர் இருக்கிறீர் !!
உதய சூரியனே !!அறிஞர் அண்ணாவின் தம்பியே !!
தந்தை பெரியாரின் மதிசுரப்பே !!
தமிழ் உள்ளவரை !!தமிழர் உள்ளவரை!!காலமெல்லாம் கலைஞர். .