கலைஞரின் பேனா
தமிழே வாழ்க! தலைவா வாழ்க!
திராவிட முதல்வா வாழ்க !
பிற்போக்கு இருள் அகற்றிய கதிரோனே வாழ்க !
சூத்திரர்க்கு மேன்மை தந்த கோவே வாழ்க!
தமிழுக்கு ஒன்று எனின் " அறவழி " கழகம் செய்வாய்!
தமிழர் வாழ்வு வளர
" அறிவு வழி " திட்டங்கள் செய்வாய்!
மேன்மைகள் மட்டும் நாங்கள் பெற புரட்சிகள் பல செய்தாய் !
தமிழ்நாடு இந்தியாவின் முதல் என்றாய் !
சொன்னபடி தமிழ்நாட்டை வளர்த்து தந்தாய்!
திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டாம் !!
திரவியம் தமிழகம் வர நல்ல பல தொழில்களை தமிழகம் கொண்டு வந்தாய் !!
ஈரோட்டு தந்தை போல் !!
காஞ்சியின் அண்ணன் போல்!!
தமிழுக்கும், தமிழர்க்கும் மேன்மை பல செய்தாய் !!
ஆரியம் செய்த சூழ்ச்சிகளை அதிரடியாய் வெல்பவரே !!
இளைய சமுதாயம் எழுகவே இளமை முதலே உழைத்தவரே!!
ஆறு மாத கடுங்காவல் என்றாலும் ஆட்சி என்றாலும் சமம்தான் உமக்கு!!
ஒரே ரத்தம் திராவிட ரத்தம் என்றாய்!!
ஓர் இயக்கம் ஓர் தலைவன் கொண்டாய் !!!
உலகம் வியக்க வள்ளுவரை அறிமுகம் செய்தவரே!!
சக்கரவர்த்தி திருமகனே!!நெஞ்சுக்கு நீதியே!!
நூல்கள் பல படைத்தாய் தமிழுக்கு அறுசுவையாய். .
உடன்பிறப்பு கடிதம் பல குவித்தாய் தொண்டர்கள் நெறி வழுவா நடக்க. .
கண்டனம் கண்ணியமாய் செய்தாய் ஆட்சி குறையின்றி நடக்க. .
அதிகாலை தொட்டு கார்மேகம் முட்டும் வரை எழுதி . எழுதி.
தமிழ்நாட்டை செதுக்கிய "பேனா"
எங்கள் தலைவர் மு .க
-இரா. முத்து கணேசு
இராசபாளையம்
anbu17ganesh@gmail.com