முத்தமிழ் தலைவர் கலைஞர் இளம்பருவம் முதல் இன்று வரை என்னற்ற கவிதைகளும், தமிழ் வளர்ச்சி கட்டுரைகள், இலக்கிய வளர்த்த தலைவர் அதுபோன்றே தளபதி ஸ்டாலின் தலை சிறந்த பேச்சாளர் என்பது நாடு அறிந்த ஒன்று. எனினும் தளபதி நல்ல கவிஞரும் கூட தளபதி.மு.க.ஸடாலினின் அல்ல கவிஞர் .மு.க.ஸடாலினின் சில கவிதைகள்
சேலம் கழக மாநாட்டில் தளபதி மொழிபெயர்த்த அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன் ஆங்கில கவிதை
" இளைஞனே ! நீ யாருக்கும்
தலை வணங்காதே !
கைவீசிச் செல்
உலகைக் காதலி
செல்வரை
செருக்குள்ளவரை
மதவெறியரை
கிள்ளி எறி !
மனசாட்சியே
உன்தெய்வம்
உழைப்பை மதி
ஊருக்கு உதவு
உனக்கு எட்டாத
கட்டளைப்பற்றி
பிதற்றாதே
சிந்தனைச் செய்
செயலாற்று "
தந்தை வழி தளபதி முப்பெரும் விழாவில் அண்ணா பிறந்த நாள் கவியரங்கில் தளபதியின் கவிதை
" அப்பா வணக்கம் அவசரப்பட வேண்டாம் !
எப் - பா வணக்கம் என இயம்புகிறேன் கேளுங்கள் !
வாழ்வியலை நெறிப்படுத்தும் வள்ளுவரின் சொத்தப்பா !
ஏழிசையின் நலம் வழங்கும் இளங்கோவின் சந்தப்பா !
நாடெங்கும் நம்தமிழர் நரம்பெல்லாம் இரும்பாக்கிப்
பாடல் பொழிந்து வைத்த பாவேந்தன் உணர்ச்சிப்பா !
வெண்பா விருத்தப்பா விரைந்துவரும் அகவற்பா !
பண்படுத்தும் ஆசிரியப்பா என்று பா தெடுத்து
நமக்கே விழிப்புணர்ச்சி நல்கிட நம் கழகத்தின்
தமிழ்க் கவிஞர் கூட்டமிங்கே தரப்போகும் எழுச்சிப்பா !
அப் பா வணக்கம் தான் அனைவரும் சொன்னேன் !
அப்பா வணக்கம் தான் நான் சொன்னேன்.
தப்பா ? மணக்கட்டும் தமிழ்ப்பா வணங்குகிறேன்.
இளைஞர்களை வரவேற்கும் இயக்கம் இது ! இன்றைக்கோ
இளைஞரணி உம்மையல்லாம் இனிதே வரவேற்கிறது.
வாழைக்கும் கன்றாக வளராமல் ; ஆலமரம்
வீழாமல் தாங்கும் விழுதாக விளங்குங்கள் !
தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
" இளைஞர் எழுச்சி நாள் " வாழ்த்துக்கள்.