Tuesday, February 17, 2015

வீரவரலாறு பேசும் பஞ்சம்பட்டி

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது குறுநில மன்னர்கள் போல் சில குறிப்பிட்ட பகுதிகளை ஜமீன்தார்கள் , பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர்.அப்போது ராஐபாளையம் அருகே உள்ள கொல்லங்கொண்டான் பாளையக்காராக வாண்டையத் தேவன் இருந்துள்ளார்.இவருடைய மெய்க்காப்பாளர் மற்றும் தளபதியாக நல்ல மாடன் என்ற குடும்பர் இருந்துள்ளார்.
வாண்டையத் தேவனின் விடுதலை போராட்ட உணர்வுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.இதனால் கொல்லன்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்டு காம்பல் தலைமையில் பிரிட்டீஷ் படை முற்றுகையிட்டு பீராங்கி தாக்குதலை நடத்தி உள்ளது.தாக்குதல் மும்முரமானதால் கோட்டை இடியத் தொடங்குயது.இந்த வேளையில் பட்டத்துராணி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.ராணியை சுரங்கப்பாதை வழியாக தப்பிக்க வைக்க முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி ராணியுடன் தேவந்திர குலத்தை சேர்ந்த தலைமை வீரர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.ராணி பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஆண் குழந்தை பெற்றார்.ராணியை காப்பாற்றியது தேவேந்திரகுலம் என்பதால் கொல்லன் கொண்டான் அரண்மனை சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அருகில் உள்ள பஞ்சம்பட்டி ஊருக்கு முதல் மரியாதை வழங்கும் வழக்கம் பின்பற்றப்பட்டது.இந்த ஊரில் தேவேந்திரர்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கொல்லங்கொண்டான் ஜமீன்தாரும், அருகில் உள்ள சேத்தூர் ஜமீன்தாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளர்.இந்த ஜமீன்கள் இடையே சேவல் போட்டி நடைபெறுவது வழக்கமாக இருந்துள்ளது.இந்த போட்டியை நடத்துவதற்கு அவர்கள் பஞ்சம்பட்டியை தேர்வு செய்தனாராம் .இதற்கான காரணத்தை கேட்ட போது நம்முடைய வாரிசை காப்பாற்றிய வீரம் விளைந்த மண்ணான பஞ்சம்பட்டியே இந்த போட்டியை நடத்த சரியான இடம் என அதற்கு விளக்கம் அளிக்கம்பட்டதாம்.நாடு விடுதலையடைந்த பின்னும் இந்த சேவல் சண்டை போட்டி நடந்துள்ளது.1971 ம் ஆண்டு நடந்த யூனியன் தேர்தலில் பஞ்சம்பட்டியை சேர்ந்த பொட்டு போட்டான் என்ற தேவேந்திரரும் ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஹரிகரனும் போட்டியிட்டனர்.இதில் பொடெ்டு போட்டான் வெற்றி பெற்றார்.இது அப்பகுதியில் புதிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது .இதனால் 1971 க்கு பிறகு சேவல் போட்டி நடைபெறவில்லை.இந்த வரலாறு தகவல் முனைவர் ராஜையா எழுதிய ஆய்வுக்களஞ்சியம் என்ற நூலிலும் , மணிகண்டன் எழுதிய வீரம் விளைந்த தமிழ் பூமி என்ற நூலிலும் உள்ளது.

No comments:

Post a Comment