Tuesday, April 28, 2015

சிந்தணை செய் மனமே

இன்றைய நாகரிக உலகத்தில் நம் கைகளில் ஐந்து விரலோடு ஆறாம் விரலாக நம்மிடம் மாறிவிட்ட ஓர் தீங்கான பழக்கம் புகைத்தல். இக்கொடிய வழக்கத்தை விட்டு ஒழித்தால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா ?
புகை விட்டதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று  AMERICAN CHEMICAL SOCIETY கூறுவதை ஒர் 5 நமிடம் நேரம் ஒதுக்கி படித்து பாருங்கள்.

* புகைப்பதை நிறுத்திய 20 வது நிமிடத்தில் உங்கள் உடல் உயர் ரத்த அழுத்தம், உடல் வெப்பம் மற்றும் நாடித்துடிப்பு.இவை அனைத்தும் சரியான நிலைக்கு வருகிறது.
* 8 மணி நேரத்தில் SMOKERS BREATH மறைந்து விடுகிறது.
* இரத்ததிலுள்ள கார்பன் மோனாக்சைடு (CO ) அளவு குறைகிறது, உயிர் சுவாசம் ( O2) அளவு உயர்கிறது.
* ஒருவர் கடைசி சிகரெட்டை தூக்கி எறிந்தால் 24 மணி நேரத்தில் மாரடைப்பு எற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் உணர்வு நரம்புகளின் முனைப்பகுதிகள் மறுபடி ஒன்று சேருகின்றன.இதனால் நாவின் சுவையுணர்வு , மூக்கின் முகரும் சக்தி மேம்படுகிறது.
* புகை நிறுத்திய மூன்றாம் நாள் மூச்சுவிடுதல் சுலபமாகிறது.
* 2 அல்லது 3 மாதங்களில் இரத்த ஓட்டம் மேம்பட்டு நடப்பது சுலபமாகிறது, நுரையிரல் கொள்ளளவு 30 % அதிகரிக்கிறது.
  * 1 முதல் 9 மாதங்களில் சுவாச குறைபாடு நீங்குகிறது.
* நுரையீரலிலுள்ள அசுத்தம் வடிகட்டும் திசுக்கள் ( சீரியா ) வேலை செய்ய அரம்பிக்கிறது.
* 1 வருடத்தில் இதய அழுத்த நோய்க்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது.

இத்தகைய நன்மைகள் நீங்கள் புகைப்பதை நிறுத்துவதால் கிடைக்கிறது.
எனவே சிந்தணை செய் மனமே .
புகைப்பதில்லை என்று முடிவு எடு !
உன்னையும் உன் குடும்பத்தையும் , சுற்றத்தையும் காப்பாற்று.

புகை இல்லா உலகம் செய்வோம்.
மரம் வளர்போம். மழை பெறுவோம்.
உடற்பயிற்சி செய்வோம். நோய்யின்றி வாழ்வோம்.

Thursday, April 9, 2015

நீர் போர்

செம்மொழியாம் தமிழ் பேசும் தமிழ் நாட்டரின் இன்றைய நிலை பாரிர். ஒரு பக்கம் வேற்றுநாட்டான் நம் மீனவரே கொடுமை படுத்துகிறான் , பிழைக்க விடாமல் தடுக்கிறான் . அன்டை நாடுதான் பகை என பாரீன் நம் நாட்டு மாநிரங்களே நம்மை துண்புறுத்துகிறதே ?
இயற்கை வளத் நாம் பேனாமல் விட்ட பாடு இன்று திரும்பி நம் கழுத்தை நெறுக்குகிறது. நீருக்காக கேரளாவும் , கர்நாடகமும் நம்மை எதிர்க்க துணிந்து விட்டன அதன் வெளிப்பாடுதான் தடுப்பனை , புதிய அணை திட்டங்கள் மற்றும் அந்திரவில் கொல்லப்பட்ட நம் ரத்தங்கள். இந்நிலை தொடர்ந்து நடைபெறின் நம் நாட்டு பிரதமர் நாட்டுக்கு நாடு நட்புறவு பயணம் செல்வதுபோல் , நாளடைவில் மாநிலத்திற்கு மாநிலம் நட்புறவு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்துணை வெள்ளம் நம்மை முழ்க காத்திருக்கும் போது நாம் என்ன செய்கிறோம் தெரியுமா ?
தொலைக்காட்சித் தொடரும்  , நடிகர்கள் டாலரும் போட்டுக் கொண்டு உலா வருகிறோம்.இந்நிலை மாற வேண்டும் எனின் " நடிகர் சங்கம் எல்லாம் மறுபடி தமிழ் இன , மொழிப்பற்று வளர்க்கும் சங்கங்கள் ஆக வேண்டும்.

இல்லேயேல் " நாய் இருந்தால் கல் இல்லை ; கல் இருந்தால் நாய்யில்லை என்ற மொழிமாறி கல் இருந்தால் தமிழன் இல்லை,
தமிழன் இருந்தால் கல் இல்லை  என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.

தள்ள படாமல் இருக்க வேண்டுமாயில் ஒர் பழைய மொழி இப்போதைய தேவையான கவிதை ஒன்று மாநிலங்களிடையே தேவை ஒற்றுமை " ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ,
அன்பே எங்கள் குணம் என்போம் ,
தலைவன் ஒருவன் தான் என்போம் ,
சமரசம் எங்கள் வாழ்வு என்போம் " .

ஒன்று படுவோம் மொழி இனம் தாண்டி ; மீட்டுஎடுப்போம் இயற்கை வளங்களை
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .