Friday, December 23, 2016

இன எழுச்சிப்பா

மூத்திர சட்டி தூக்கி !
எங்கள் சூத்திர பட்டம் ஒழித்த !
தாயும் ஆனவனே!

பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவைப் போல்
3.43 மடங்கு சுற்றி
இத்திராவிட நாட்டைச் சுற்றி;
பகுத்தறிவு பரப்பிய ஆதவனே!

ஈரோட்டு செல்வந்தா!
காடு மேடு உறங்கி!
கருமி வாழ்வு வாழ்ந்தது உம் குடும்பத்திற்கோ?
தமிழ் சமுகத்திற்கு!

திருக்குறள் புகழும், எழுத்து சீர்திருத்தமும்!
சுயமரியாதை உணர்வும்! பெண் உரிமையும்!
சமத்துவபுரமும்!
நீன் கொடையே!
திராவிட சமுகத்திற்கு. .

சூரிய ஒளி செல்லா திசையில்லை!
உம் காலாடி பாடா வீதியில்லை!
இத்தமிழ்நாட்டில்!

உம் எழுத்தும்! குரலும்!
உள்ளவரை !
உம் திராவிட சமுகம் வாழும்!
இன எழுச்சி பகலவா வாழ்க!
இனியில்லை பார்ப்பான் சூத்திரன் என திராவிடனை ஆள!

Monday, December 19, 2016

ஓடி வா ! திராவிடா!

ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா!

ஆதி தோன்றி அகிலம் வாழும்
தமிழ்மொழி பேச
ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா !

பாதியிலே தோற்றப்பட்டு மக்களிடம்
பிரிவு தன்னை தோற்றுவித்த சாதியை
வேரோடு ஒழிக்க
ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா !

நம்மை காத்து வந்த முன்னோரே!
நட்டகல்லாக்கி!
மதுவில் சித்தம் கலங்கி
உளறி வைத்த கதைமாந்தரை!
கடவுளாக்கி! போலி கடவுள் மாயையால்!
மனிதரில் மதப்போரை புகுத்திட்ட
ஆரிய பூளுகுகளை நீக்கிட
பகுத்தறிவு பரப்ப ஈரோட்டு தலைவன் வழி!

ஓடி வா ! திராவிடா!
ஓடி வா ! திராவிடா!

Sunday, December 18, 2016

பெண் உரிமை

பிறந்தது. . பிறந்தது. .
எம் தந்தை பெரியாரின்
பெண் உரிமை பிறந்தது.

அகன்றது. . அகன்றது. .
அறிவுலக ஆசான் தந்த
சிந்தனை சூட்டில்
பெண் அடிமை அகன்றது. .

பறக்குது. . பறக்குது. .
தந்தை பெரியார் திராவிடர் கழக கொடி பறக்குது.
அதை காணும் போது எல்லாம்
காவியின் மேல் கொண்ட
அடிமைத்தனம் பறக்குது.

இருக்குது. .இருக்குது.
சுயமரியாதை இருக்குது
சமத்துவம் இருக்குது.

நோறுங்குது. . நோறுங்குது. .
முடநம்பிக்கை நோறுங்குது.
பெண்ணடிமை நோறுங்குது.
சாதி வேறுபாடு நோறுங்குது.

உடைப்போம்.
உடைப்போம்.
திராவிட நாட்டில்
காவி வந்தால் உதைப்போம்! உடைப்போம்!

நடப்போம். .
நடப்போம்.
என்றும் தந்தை பெரியார் வழி நடப்போம்.

பெண்ணால் முடியும்

நம் சகோதரிகளின் துடைப்பம் வீட்டைமட்டும்மல்ல நாட்டையும் சுத்தப்படுத்தும் உயர்த்திப்பிடித்தால். .

பெண்ணால் முடியும்.

Tuesday, December 13, 2016

சமுகத்தின் பதில் நோக்கி. .

கைதட்டல் சத்தம்
செவி அறையை தாண்டி
கண்ணத்தில் சுளீர் என விழுகிறது
உன்னை போன்றே தாயின் வயிற்றில் பிறந்த என்னை ஏன்?

பிச்சை எடுக்க வைக்கிறாய் என்று?

#திருநங்கைகள்

சமுகத்தின் பதில் நோக்கி. .

கைதட்டல் சத்தம்
செவி அறையை தாண்டி
கண்ணத்தில் சுளீர் என விழுகிறது
உன்னை போன்றே தாயின் வயிற்றில் பிறந்த என்னை ஏன்?

பிச்சை எடுக்க வைக்கிறாய் என்று?

#திருநங்கைகள்