Tuesday, September 24, 2019

குருதி கொடை


ஓர் அறிவு தோன்றி !
ஐந்தறிவு வந்தன எல்லாம் !
செல்லா இல்லம்.

கல்லுக்குள் நீராய் !
சொல்லுக்குள் நேராய் !
தலைமுறை தாண்டி வாழும் வெல்லம்!

வெள்ளத்தால் கொல்லாது !
பெரும் போரால் கோழையாகாது.
நிலநடுக்கத்தால்  நடுக்காது!
வாழும் கொடை!!

நிறம் ! நிலம் ! பேதம் !
சாதி ! மத ! சாக்கடை உடைத்து !
நிலைத்த சமூகநிதி
சான் அளவும் தனக்காய் வாழாது!
வாழும் "குருதி கொடை "

Wednesday, January 23, 2019

இரு நாக்கு நல்லோர்

தினசரி நாள்காட்டி !
நேரம் முடிந்து கிழிகிறது!
கழிகிறது காலம்!
கழிகிறது நேரம் !
மீண்டும் ! மீண்டும் !
உதயம் தொடங்கினும்!
கவலை மட்டும் போகலையே!
உறிக்கும் வெங்காயமாய் !
பயனிற்றி !
பலனிற்று !
பழுக்காத காய்யாய் !
கசக்கும் காய்யாய்!
இரு நாக்கு நல்லோரால்
நடக்குது வாழ்வு!

Tuesday, January 22, 2019

மகள் அதிகாரம்

காந்தத்தின் ஈர்ப்பு விசை . .
உள்ளது உன் குரலில். .
எட்டு எடுத்து வைக்கவில்லை
கொள்ளை அடிக்கிறாய் எங்கள் மனதை. .
மொழி விளங்கா உன் பேச்சில்
அந்த தேன் சிரிப்பில். .
பறக்குது சோகம் எல்லாம். .
எந்தன் அந்தாதியை தொடரும் உயிர் பொருளே!
நீ உறங்கு!
கண் முடி உறங்கையில் முறிக்கும் சோம்பல்!
எட்டாம் அதிசயம்!
பல் இல்லா முகத்தின் சிரிப்பு!
மகிழ்வின் மாத்தாப்பு!
மகளே !
ஞாயிற்றுகாய் காத்திருக்கிறேன்
உனை காண!
கண்டு அழுது கலக்காதே!
சிரித்து என் காயம் சிர் செய்!