காந்தத்தின் ஈர்ப்பு விசை . .
உள்ளது உன் குரலில். .
எட்டு எடுத்து வைக்கவில்லை
கொள்ளை அடிக்கிறாய் எங்கள் மனதை. .
மொழி விளங்கா உன் பேச்சில்
அந்த தேன் சிரிப்பில். .
பறக்குது சோகம் எல்லாம். .
எந்தன் அந்தாதியை தொடரும் உயிர் பொருளே!
நீ உறங்கு!
கண் முடி உறங்கையில் முறிக்கும் சோம்பல்!
எட்டாம் அதிசயம்!
பல் இல்லா முகத்தின் சிரிப்பு!
மகிழ்வின் மாத்தாப்பு!
மகளே !
ஞாயிற்றுகாய் காத்திருக்கிறேன்
உனை காண!
கண்டு அழுது கலக்காதே!
சிரித்து என் காயம் சிர் செய்!
No comments:
Post a Comment