Saturday, July 11, 2020

சாலையோரப் பூக்கள்

ஆடி மாசந்தானே! ஆட்டிப்படைக்கும்

நீத்தம் நூல் தாலியாய்!

எப்போது சாவுஎன நினைச்சிகிட்டே!

பொழுதும் விடியுது! பொழுதும் அடங்குது!

பாரி வந்து தேர் தருவானோ?

மயில்குளிர் தீர்த்த மன்னவன்தான்

வருவானோ? ரோட்டில் நூறைத்

தாண்டி வரும்காலனை கண்டதும்

நெஞ்சு துடிக்குது ! வேலைக்கு போகிற

ராமாயி கூட நடக்கும் போது!

ஏன் விரல உடைச்சுதானே போகுறா?

எனக்கு தண்ணி உற்ற வேணாம்!

மண்னை நம்பி வளர்ந்துகிறேன்!

மனுச பயலுகளா ? வாழவிடங்கய்யா!

சாலையோரப் பூக்கள்

No comments:

Post a Comment