ஆடி மாசந்தானே! ஆட்டிப்படைக்கும்
நீத்தம் நூல் தாலியாய்!
எப்போது சாவுஎன நினைச்சிகிட்டே!
பொழுதும் விடியுது! பொழுதும் அடங்குது!
பாரி வந்து தேர் தருவானோ?
மயில்குளிர் தீர்த்த மன்னவன்தான்
வருவானோ? ரோட்டில் நூறைத்
தாண்டி வரும்காலனை கண்டதும்
நெஞ்சு துடிக்குது ! வேலைக்கு போகிற
ராமாயி கூட நடக்கும் போது!
ஏன் விரல உடைச்சுதானே போகுறா?
எனக்கு தண்ணி உற்ற வேணாம்!
மண்னை நம்பி வளர்ந்துகிறேன்!
மனுச பயலுகளா ? வாழவிடங்கய்யா!
சாலையோரப் பூக்கள்
No comments:
Post a Comment