Tuesday, April 30, 2024

பாரதிதாசன் பிறந்தநாள் கவிதை

அழகிய குளிர்ச்சியும்! ஆழ்ந்த அறிவும்! நிறைந்த கருத்தாழமும்! புசிப்போரை வசிக்கும் திறனும்! வழிகாட்டும் ஒளி வெளிச்சமும் !
அவர் எழுத்தில் உண்டு . ..

பக்தர்களை புத்தராக்கும் உம் கவிதை! 
கோழையை வீரனாக்கும் உம் கவிதை! 
கருத்து புதையல் உம் கவிதை! 
கொள்கை விளக்கம் உம் கவிதை! மாணவரை முனைவராக்கும் உம் கவிதை! 

நம் தமிழ் நம் தமிழ் என்றாய்! 
நற்றமிழ் மனம் கமலம் தேன் என்றாய்! 
 நாற்றிசை தமிழால் வென்றாய்! 
நால் வர்ணம் தீதென்றாய்! நாமக்கெல்லாம் பகுத்தறிவு காவல் என்றாய்! 


பார் கொண்டாடும் பாவலரே! 
சீர்மிகு ஈரோட்டு சிப்பாயே! 
முத்தமிழ் ஆண்ட கோவே! 
சித்திரை வந்தபோதெல்லாம் உன் நித்திரை கவிதைதான்
தை ஒன்று தமிழ் புத்தாண்டு என போர் முரசு கொட்டும்! 

காணாத கடவுளைச் சாடி !
சாத்திரக் குப்பையை அகற்றி! 
பெண்ணடிமை போக்கி !
சமூகநீதி போற்றும்  உம் கவிதை !


உம் கவிதை வாசித்து புத்துலகை! புது பார்வையோடு பார்க்கிறோம். . 

பாரதிதாசனார் கவிதை !
புத்துலகப் பாதை! படிப்போம்! படைப்போம்! ஆதிக்கமற்ற உலகம்! 

நன்றி !
வணக்கம்! 

-இரா முத்து கணேசு

Sunday, April 14, 2024

ஆற்றல்

சிறைபட்ட அறைகுள்ளும்
அளவில்லா ஆற்றல் பெற்றவன் மனிதன்!

Sunday, March 10, 2024

புரட்சி பூக்கள்

புரட்சி பூக்கள் மலரட்டும் !
புதிய சிந்தனை பிறக்கட்டும் !
சீரிய எண்ணங்கள் தோன்றட்டும்! 
சிறந்த பாதைகளை நோக்கி கால்கள் நடக்கட்டும் .

நாம் நடக்கும் பாதையில் .
சாதிகள் நசுங்கட்டும். 
பிறவி வேதம் ஒழியட்டும் .
சமத்துவ பாதையை உருவாக்குவோம்! 

அறிவு எனும் ஆயுதமே !
அறியாமை நீக்கும். அறிஞர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் !
சமுதாய வாழ்வுக்கு இரு கண்கள். 

கண்களே! இதயத்திடம் சொல். 
 சமத்துவம் பக்கம் நிற்கச் சொல். அனைவரும் சமம் என்று வாழச்சொல். ஆதிக்கம் மற்ற சமூகம் உருவாகும் .