புரட்சி பூக்கள் மலரட்டும் !
புதிய சிந்தனை பிறக்கட்டும் !
சீரிய எண்ணங்கள் தோன்றட்டும்!
சிறந்த பாதைகளை நோக்கி கால்கள் நடக்கட்டும் .
நாம் நடக்கும் பாதையில் .
சாதிகள் நசுங்கட்டும்.
பிறவி வேதம் ஒழியட்டும் .
சமத்துவ பாதையை உருவாக்குவோம்!
அறிவு எனும் ஆயுதமே !
அறியாமை நீக்கும். அறிஞர் அம்பேத்கரும் ,தந்தை பெரியாரும் !
சமுதாய வாழ்வுக்கு இரு கண்கள்.
கண்களே! இதயத்திடம் சொல்.
சமத்துவம் பக்கம் நிற்கச் சொல். அனைவரும் சமம் என்று வாழச்சொல். ஆதிக்கம் மற்ற சமூகம் உருவாகும் .
No comments:
Post a Comment