Saturday, January 17, 2015

தமிழ் சொல்லில் பெண்

தமிழ்மொழி சுவைமிக்கது என்னற்ற மொழிகளுக்கு தாயாகவும் , இலக்கியசுவைமிக்க மொழி, உலகமொழிகளில் இலக்கண, இலக்கிய , இசை வடிவமுடைய ஒப்பற்ற மொழி "தேன் கொஞ்சும் " தமிழ்மொழி. நம் தமிழ்மொழியில் சொற்கள் உருவாக உயிர் , மெய் மற்றும் உயிர் மெய் எழுத்துக்கள் முற்றிலும் தேவை. உயிர், மெய், உயிர்மெய் துணையின்றி தமிழ் சொற்கள் உருவாகா ?
அதுபோன்றே மனித இனம் உருவாக பெண் தேவை.அதலலே நம் பூமிக்கு " பூமாதேவி " என்று பெண்பாற் தன்மை தந்து பெண்ணியம் மதிக்கிறோம்.
அதனால் பெண்களை தமிழ் இலக்கியமும் எத்துணையோ ! வர்ணணை மற்றும் அழகு சொற்களால் அலங்கரிக்கிறது.
அதில் 2 சொற்களை பார்க்கும் போது " உயிர்எழுத்து " பெண்களுக்கு தீமை செய்தது.
"உயிர்மெய் "  மேன்மை தந்தது.அந்த இரு சொற்கள் என்ன தெரியுமா ?
"அ "மங்கலி , மற்றும் (சு)மங்கலி. இவ்விரண்டும் பெண்ணை சுட்டும் சொற்களே ! (அ )என்பது உயிர் எழுத்து , ( சு = ச் + உ) என்பது உயிர்மெய் எழுத்து.
"சுமங்கலி " பெண்களை  மேன்மைபடுத்துவது போன்றும் "அமங்கலி " பெண்களை இழிவுபடுத்துவதுகிறதே ? தமிழ்சான்றோர் என் பிழை செய்தனர்.

No comments:

Post a Comment