Wednesday, November 1, 2017

கருணை

சட்டை பையில் பொருளோடு கருணையும் நிரப்புங்கள்

அது மனசாட்சியை சாகமல் நிலைக்கச் செய்யும்.

Saturday, September 23, 2017

பிச்சைகாரன்

நிரம்பி இருந்த தொடர்வண்டியில்
என் குரல் மட்டும் நிறைந்தது
நிறையவில்லை என் வயிறு

-பிச்சைகாரன்

Thursday, September 21, 2017

அது எது ?

நடக்கையில் சரிக்கிடும்!
தவளும் போது சிரித்திடும் !
பேசும் போது எளனம் செய்யும் !
பணி செய்தால் ஏவல் செய்யும் !
கொள்கை என்றால் முன்னேற்றாது !
கொட்டிக் கொடுத்தால் பொருக்கிடும்!
கேட்டால் கொடாது!

அது எது ?

சாதி பார்த்திடும் !
சமயம் பார்த்திடும் !
சகுனம் பார்த்திடும் !
சில்லறை பார்த்திடும் !
பிறர் சிரிக்கப் பார்த்திடும்!

அது எது ?

நன்மை செய்ய என்னாது !
நன்மை செய்வோரை மனிதனாய் என்னாது!
நாளும் மாறும் சூழ்நிலை என்னாது!
நீயும் நானும் புண் ஆனாலும் என்னாது!

அது எது ?

அது சுயநலத்தின் முகம்.

அது ஒரு சார்பான முகம்.

அது செல்வந்தனுக்கான முகம்.

அதுதான் இந்த " சமூகம் "

Monday, September 18, 2017

போர்களம்

வாழ்வு எனும் போர்களத்தில்
களம் காணும் வீரர் நாம்
தினம் போர்தான்
வெற்றி ஓர் முறையே
அதுவரை போரிடு
பின்வாங்காதே. .
@anbu17ganesh

Friday, September 8, 2017

மனம்

கிடந்தால் கிடத்தும்
நடந்தால் நாடனமாடும்
ஓடினால் பின் ஓடி வரும்
#மனம்
கிடக்க கல்லாமல் ஓடக் கற்றுக்கொள்ளுங்கள்.

Monday, September 4, 2017

பாரம்

ஓய்வு தராத பாடத்தை
பாரத்தை
தனிமை
தந்துவிடும். .

Sunday, September 3, 2017

முகவரி

வாழ்ந்து விட்டு போவது
வாழ்க்கையல்ல. .

வாழ வைத்துவிட்டு போவது
வாழ்க்கை. .

நித்தம் நாள்கள்
கடத்துவதும்
வாழ்க்கையல்ல. .

நாள் எல்லாம்
நம் நினைவை நிலைநிறுத்துவதே
வாழ்க்கை. .

தடைக்கல் கண்டு
பயந்தவனுக்கு
வாழ்க்கையல்ல. .

தடைக்கல் உடைய
உழைப்பனுக்கே
வாழ்க்கை. .

வாழ்க்கை வாழ . .
வாழ வேண்டும். .
நாளும் புதுப்புது
அனுபவம் தேடு
அதற்காக ஓடு. .
நானில்லை நாமாய்
உழைக்க கற்றுக்கொள்
பிறரை மதிக்க கற்றுக்கொள். .
பணிவு சமூகத்தில்
மதிப்பைத்தரும்
மதிப்பு சமூகத்தில்
முகவரி தரும் . .

முகவரியை தெளிவு செய்தால்
வரலாற்றிக்கு போய் செறும்
நம் முகவரி. .

அதற்கு முதல் வரி
முகவரி
தெளிவு.  .
உழைப்பு . .
விடா முயற்சி. .

Tuesday, August 29, 2017

139 பெரியார்

மான உணர்ச்சியும்,பகுத்தறிவும் ஊட்டிய பகுத்தறிவு பகலவனை எந்நாளும் போற்றுவோம்
#HBDPERIYAR139 https://t.co/M5IMzLD9BW

Sunday, July 30, 2017

தேவை

தேவை பிறக்கும் போதே
அதை நிரப்பும் பொருளும்
அதற்கான கண்டுபிடிப்பும்
வந்தே தீரும்

Wednesday, July 26, 2017

கோழைத்தனம்

சமூகநீதி போரில்
களம் கண்ட
வீரன்
பின்வாங்குவது
ராஐதந்திரமல்ல
கோழைத்தனம்.

இலட்சியவாதி

அடக்குமுறைக்கு ஆளாகினும்
இலட்சியத்தால்
ஒன்றுபட்டு உழைப்பவனை
எந்தவொரு
சர்வாதிகாரமும்
வென்றிடாது.