Saturday, May 23, 2020

சொல்லத்தான் நினைக்கிறேன்

ரிங்காரமிட்டு சுற்றிடும்
குருவியிடம் காலை
பேசி சிரித்துவிட்டு
என் மொழி தமிழென
சொல்லத்தான் நினைக்கிறேன் .

என் குரல் கேட்டு வந்தாய் !
வலசை போதலால்
நகரம் நாடு கடந்து
வாழுமினம் நீ !!!
ஏன் கேள்வி கேட்டு ?

கோபம் கொள்வாயோ !
உங்கள் மொழிபிரிவினையை
எங்களுக்குள்ளும் கடத்துகிறாயா ?
எங்களுக்குள் மொழியில் லை !
பேதமில்லை! சாதியில்லை!

சண்டையில்லை! சுறுசுறுப்பாய்
வாழ தெரியும் !
அன்றாட தேவை தேடி
வாழ தெரியும்!
சேமிப்பு கிடையாது!

அதனாலே எங்களுள்
திருட்டு கிடையாது!
நீ என்னிடம் பதில் கேள்வி கேட்டால்
என் முகம் கொண்டு
நான் எங்கு வைப்பேன் !!

Friday, May 22, 2020

துரோகம்

வெற்றி ஒன்றே என !

மதி மறந்து !

நற்குணம் இழுத்து !

கல்விச்சிறப்பிழந்து !

இழி மனிதராய் நடந்து !

பாசம் இறந்து !

மேன்மை மறந்து !

வெற்றி எல்லாவற்றையும்

நியாயம் செய்யுமென !

குறுக்குவழி நடந்து !

துரோகம் செய்து !

துரோகி ஆகாதே !

அன்பால் கசிந்துருகி !

உன்னை தொலைத்து !

நறுமணமாய் மக்கள்

மனதே வசமாக்கு !

துரோகம் கொல்லும் !

Thursday, May 14, 2020

நம்பிக்கை


பெருங்கடல் படகு துடுப்போடு கரை சேர்தலும் !

கடும் குளிரில் எல்லையில்
படைவீரர்கள் நம்மை காத்தலும் !

பெற்றோர் மழலை தளிர்களை
ஆசானிடம் ஒப்படைத்தலும் !

தினம்தினம் விடியல்
இரவும் பகலும் சுழல்தலும் !

ஆறறிவு மனிதன் அன்றாட வாழ்வும்
அவன் கொண்ட நம்பிக்கையாலே !

நாமும் வெல்வோம்
காவல், சுகாதார, செவிலியர் படையோடு
கொல்வோம் கொரோனாவை !

Tuesday, May 12, 2020

வாழ்(கை) தேவை


உன்னில் இருக்கும் உன்னை . .

உலகுக்கு பேரறிவாய்..

ஒப்புரவாளனாய் . ‌.

மேதையாய் . ‌.

சமூகம் போற்றும் அறிஞனாய்‌ . .

பண்டிதனாய் . .

புகழ் மனக்கும் உம் குலகொழுந்தாய் . ‌.

இப்புவியில் பெருமை பெற்று. .

நீ வாழ !

காகிதம் என எண்ணாது ;

உன் ஆயுதம் என்று நித்தம்

பெரும் பசியோடும் . .
பெரும் தேடலோடும் . .
பெரும் ஆர்வத்தோடும்
..

நீந்தும் உன் வாசிப்பை பெருக்கு . .
அறிவை கூட்டு. .
இயலாது என்ற மனோபாவத்தை கழி !
நற்பாதை வகு !

வகுத்த வழி நடந்து !

பழுத்த மரம்போல் செல்வம் சேர் !

உனக்கு போக ஊருக்கு கொஞ்சம் கோடு . .

மக்கள் நல் இதயத்தில் இடம் பெறு . .

புகழ் சிலை வேண்டாம். .

உலகில் நீ யார் என தெரியும்படி வாழு !!

போகும் போது புகழோடு செல் !

அதற்கு கல்வியே உன் கை . .

புரட்டு புத்தகங்களை !

அறிவை விரிவு செய் !!

மனிதனாய் வாழ் !!!

Monday, May 11, 2020

மது

கல்,மலம், எடை சுமக்கும் தோழர்களும் !

வாகன சாரதியும் ! இன்னும் பலர்

உடல் வருத்தி வலி போக !

சோமபான அரக்கன் வசமாயினர் !

மனித மூளை சாயம் செய்த அரக்கன்

உயர்தட்டு பானம் "மது" என்றான்

தீமை இலகு செயல் !

எளிய செயல் அடிமையானது !

ஆறறிவு கூட்டம் ! விளைவு

அறம் ஒழிந்தது !

களவு கொலை பலித்தது

அரசே கடை திறந்தாலும்

மதுவிடம் ஒத்துழையாமை போராட்டம்

நடத்தி வெல்வோம் ! மானிட சமுத்திரமே !

Sunday, May 10, 2020

அன்னை

கண்டிப்பு  இராணுவம் போல் !

தாங்குவதில் பூமி போல் !

குடும்பங்களை தாங்கும் அடித்தளம்!

கருணையின் முகவரி !

தன் தேவை சுருக்கி !

குடும்ப வளம் பெருக்கி !

நம்மில் வாழும் தெய்வம் !

நாட்டையும் தாய் என்போம் !

ஏன் ?

தாய் என்றதுமே பாசம் வருவதாலே !

நமக்காக உழைப்பவர் தாய் !

எதிர்பார்ப்பு இல்லாதவர் தாயே !

தாயே ! நம் உலகம் !

மனதில் சுமப்போம் இறுதிவரை !

நம் வீட்டு ராணியை !

நம் தாயை !

முதியோர் இல்லம் வேண்டாம் !

நம் தாய் வாழும் வீடே நம் வீடாய் வேண்டும்.

Friday, May 1, 2020

மே தினம்

கடலால் சூழ்ந்து காடு பரந்த உலகை !

காடு திருத்தி ! நாடு திருத்தி !

வியர்வை உதிரம் சிந்தி !

மண்னை சோலையாக்கி !

மக்கள் செல்லும் பாதையும் !

பயணம் செல்லும் ஊர்தியும் !

உண்ணும் உணவும் !

உடுத்தும் கலிங்கமும் !

உழைப்பாளிகளின் கொடை !

உம் கைகளால் சுழலும் உலகம் !

நீ உழைப்பை மறந்தால் அகிலம் அரளும் !

உலகை இயக்கும் இயக்கத்திற்கு !

உள்ளம் கணிந்த நன்றி !

*மே தினம்* ! நம் தினம் !

நம்மவர்கள் தினம் !

பாவேந்தர் புகழ்மாலை

தாசனில்லை வாசன் தமிழ்வாசன் !

தேன் மதுர தமிழில் வாசம் செய்யும் கவி !

வயிற்று பிழைப்பிற்கு எழுதுவோர் மத்தியில் !

இன் உணர்ச்சி கவி பாடிய கவி நீர் !

பாசுரம் பாடிய தமிழை !

மொழி வளர்ச்சிக்கும் ! பகுத்தறிவு சிந்தனைக்கும் !

பாடிய கவி நீர் தானே!

சித்திரை பிறந்த போது எல்லாம் !

உம் கவிதை இளைஞர் ஆயுதமாய் !

தை ஒன்று தமிழ் புத்தாண்டு !

என இனமுரசு கொட்டும் !

உம் போல் இயற்கை கவி யார் ?

பெரியார் புகழ்ந்த கவி நீர்  !

தமிழ் நேசித்த மெய்கவி நீர் !

தமிழில் கவியால் அமிழ்து செய்தவர் நீர் !

பிறமொழி கலப்பை ஒழித்தவர் நீர் !

மானமுள்ள தமிழனே !

உலகின் இரண்டாம் பொதுமறை உம் கவிதை !

வாழிய திராவிடனே ! வாழ்க !