Friday, May 1, 2020

பாவேந்தர் புகழ்மாலை

தாசனில்லை வாசன் தமிழ்வாசன் !

தேன் மதுர தமிழில் வாசம் செய்யும் கவி !

வயிற்று பிழைப்பிற்கு எழுதுவோர் மத்தியில் !

இன் உணர்ச்சி கவி பாடிய கவி நீர் !

பாசுரம் பாடிய தமிழை !

மொழி வளர்ச்சிக்கும் ! பகுத்தறிவு சிந்தனைக்கும் !

பாடிய கவி நீர் தானே!

சித்திரை பிறந்த போது எல்லாம் !

உம் கவிதை இளைஞர் ஆயுதமாய் !

தை ஒன்று தமிழ் புத்தாண்டு !

என இனமுரசு கொட்டும் !

உம் போல் இயற்கை கவி யார் ?

பெரியார் புகழ்ந்த கவி நீர்  !

தமிழ் நேசித்த மெய்கவி நீர் !

தமிழில் கவியால் அமிழ்து செய்தவர் நீர் !

பிறமொழி கலப்பை ஒழித்தவர் நீர் !

மானமுள்ள தமிழனே !

உலகின் இரண்டாம் பொதுமறை உம் கவிதை !

வாழிய திராவிடனே ! வாழ்க !

No comments:

Post a Comment