தாசனில்லை வாசன் தமிழ்வாசன் !
தேன் மதுர தமிழில் வாசம் செய்யும் கவி !
வயிற்று பிழைப்பிற்கு எழுதுவோர் மத்தியில் !
இன் உணர்ச்சி கவி பாடிய கவி நீர் !
பாசுரம் பாடிய தமிழை !
மொழி வளர்ச்சிக்கும் ! பகுத்தறிவு சிந்தனைக்கும் !
பாடிய கவி நீர் தானே!
சித்திரை பிறந்த போது எல்லாம் !
உம் கவிதை இளைஞர் ஆயுதமாய் !
தை ஒன்று தமிழ் புத்தாண்டு !
என இனமுரசு கொட்டும் !
உம் போல் இயற்கை கவி யார் ?
பெரியார் புகழ்ந்த கவி நீர் !
தமிழ் நேசித்த மெய்கவி நீர் !
தமிழில் கவியால் அமிழ்து செய்தவர் நீர் !
பிறமொழி கலப்பை ஒழித்தவர் நீர் !
மானமுள்ள தமிழனே !
உலகின் இரண்டாம் பொதுமறை உம் கவிதை !
வாழிய திராவிடனே ! வாழ்க !
No comments:
Post a Comment