ஞாயிறு போற்றுதும்
பலன் கருது இல்லை ! மக்கள் நலன் கருதி !
இளம் பருவம் தொட்டு ! மக்களோடு மக்களாய் ! தோழனோடு தோழனாய் !
கவிஞனாய் !
கலைஞனாய் ! எழுத்தாளனாய் ! பேச்சாளனாய் !
அய்யா பெரியார் சீடனாய் ! அண்ணாவின் தம்பியாய் ! உடன்பிறப்பாய் !
களம் பலகண்டு !
பூமாலை ! வசை மாலை !
புகழ் மாலை ! அடி மாலை !
எம்மாலை வந்திடும்
உவகையோடு ஏற்று !
அடக்கு முறையை அலையாய் ஏற்று !
உருகி ! ஒளியை ஊற்றாய் !
பலனை நீர் ஊற்றாய் !
தமிழ்நாடு எங்கும் தந்தாயே தலைவா !
உலக மெச்சுகிறது திராவிட மாடலை!
எல்லோருக்கும் தெரியும் சூத்திரதாரி நீர் என்று . .
உம்மை வசை பாடிய பலர் நினைவிலும் இல்லை . .
என்றும் எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் . .
ஏழைக்கு பயன் தரும் மரமாய் !
உம் சிந்தனையும்!
செயலும்!
உழைப்பும் நிலைத்து உள்ளது !
பட்ட அடிகளை மூலதனமாக்கி கொட்டித் தந்தாய் இன்பம் பாமரருக்கு வட்டியாய் . .
சமத்துவபுரம் சாதி ஒழிக்கிறது !
உழவர் சந்தை வறுமை ஒலிக்கிறது!
சமச்சீர் கல்வி பிற்போக்கு ஒலிக்கிறது! மகிழ்கிறது
மகிழ்கிறது செம்மொழி உம்மால். .
தாயை முன்னிறுத்திய தலையனால் . .
அரியணை ஏறி செருக்கு கொள்வோர் காலத்தில் . .
மொழிக் காய்!
இணத்துக்காய் ! அரியணை துறந்தது நீர்தானே . .
உம் போல் மக்கள் வறுமை ஒழித்தது யார்?
கிராமந்தோறும் வளர்ச்சியை கொண்டு சேர்த்தது யார்?
தெளிந்த சிந்தனையால் நீர் தீட்டிய திட்டங்கள்!
தொலைநோக்காயிருக்கிறது . .
மானமிகு சுயமரியாதைக்காரரே!
மாசற்ற பொதுநலவாதியே!
மாண்புமிகு முதல்வரே!
நிலைத்த ஞாயிறே!
மனம் திறந்து நினைக்கிறோம் !
இன்னும் உங்கள் குரல் கேட்க துடிக்கிறோம்!
பயன் கருதி போற்றவில்லை !
பயன் தரும் கருத்தியலை!
திராவிடரை உயர்த்தும் கொள்கை கொண்டு உழைத்த தலைவனே! ஞாயிறே போற்றுதும்! போற்றுதும்!
இரா. முத்து கணேசு