Thursday, June 30, 2022

ஞாயிறு போற்றுதும்

         ஞாயிறு போற்றுதும்

பலன் கருது இல்லை ! மக்கள் நலன் கருதி !
இளம் பருவம் தொட்டு ! மக்களோடு மக்களாய் ! தோழனோடு தோழனாய் !
 கவிஞனாய் !
 கலைஞனாய் ! எழுத்தாளனாய் ! பேச்சாளனாய் !
அய்யா பெரியார் சீடனாய் ! அண்ணாவின் தம்பியாய் ! உடன்பிறப்பாய் !
 களம் பலகண்டு !
 பூமாலை  ! வசை மாலை !
 புகழ் மாலை ! அடி மாலை !
 எம்மாலை வந்திடும் 
உவகையோடு ஏற்று !

 அடக்கு முறையை அலையாய் ஏற்று !
உருகி ! ஒளியை ஊற்றாய் !
 பலனை நீர் ஊற்றாய் !
 தமிழ்நாடு எங்கும் தந்தாயே தலைவா !
 உலக மெச்சுகிறது திராவிட மாடலை!

 எல்லோருக்கும் தெரியும் சூத்திரதாரி நீர் என்று . .
 உம்மை வசை பாடிய பலர் நினைவிலும் இல்லை . .
 என்றும் எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் . .
ஏழைக்கு பயன் தரும் மரமாய் !
உம் சிந்தனையும்!
 செயலும்! 
உழைப்பும் நிலைத்து உள்ளது !

 பட்ட அடிகளை மூலதனமாக்கி கொட்டித் தந்தாய் இன்பம் பாமரருக்கு வட்டியாய் .  .


சமத்துவபுரம் சாதி ஒழிக்கிறது !
உழவர் சந்தை வறுமை ஒலிக்கிறது!
 சமச்சீர் கல்வி பிற்போக்கு ஒலிக்கிறது! மகிழ்கிறது
 மகிழ்கிறது செம்மொழி உம்மால்.  .

 தாயை முன்னிறுத்திய தலையனால் . .

 அரியணை ஏறி செருக்கு கொள்வோர் காலத்தில் . .

 மொழிக் காய்!
 இணத்துக்காய் ! அரியணை துறந்தது நீர்தானே . .

 உம் போல் மக்கள் வறுமை ஒழித்தது யார்?
 கிராமந்தோறும் வளர்ச்சியை கொண்டு சேர்த்தது யார்?
 தெளிந்த சிந்தனையால் நீர் தீட்டிய திட்டங்கள்!
 தொலைநோக்காயிருக்கிறது . .
மானமிகு சுயமரியாதைக்காரரே!
 மாசற்ற பொதுநலவாதியே!
 மாண்புமிகு முதல்வரே!
 நிலைத்த ஞாயிறே!
மனம் திறந்து நினைக்கிறோம் !
இன்னும் உங்கள் குரல் கேட்க துடிக்கிறோம்!
 பயன் கருதி போற்றவில்லை !
பயன் தரும் கருத்தியலை!
 திராவிடரை உயர்த்தும் கொள்கை கொண்டு உழைத்த தலைவனே! ஞாயிறே போற்றுதும்! போற்றுதும்!

இரா. முத்து கணேசு

No comments:

Post a Comment