உலக தமிழ்ச்சங்கம் , மதுரை மற்றும் பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலம் நடத்திய கலைஞர் 100 கவிஞர் 100 சிறப்புக் கவியரங்கில் எனது கவிதை
மாமதுரை அவையே!
தித்திக்கும் தேனே ! கரும்பே !
உன்னை வணங்கி .
உன் மண் நின்று!
உலகத்தமிழ் காவலன் புகழ் பாடுகிறேன் !
தமிழ் அன்னையே! தமிழ் காவலன் யார் என்கிறாயா?
உன் புதல்வன் பற்றி நீ அறியாததா? அவையில் இருக்கும் சான்றோர் மக்கள் அறியாததா ?
பிறகு ஏன் என்கிறாயா?
பைய நாவசைத்து.
உலக தொடக்கம் தொட்டே . .
பிறந்து வளர்ந்து சிறந்து. .
இலக்கணங்களால் வேரூன்றி! இலக்கியங்களால் மனம் பரப்பி! இசையால் என்றும் வாழும் எங்கள் தமிழ் அல்ல அல்ல. .
நம் தமிழ் மொழியை பாழ்படுத்த எப்போதும் முயன்று தோற்க்கிறதே. ஆரியம் !
அது சமஸ்கிருதம் என்றும் !
இந்தி என்றும் !
கடையில் விலையாகாத பழைய சரக்கை !
சுவையில்லா அம்மொழியை!
என் தமிழ் மொழியிலிருந்து பிறந்திட்ட அம்மொழி !
நான்தான் முதல் என்றும் .
என் தமிழ் மொழி சிறப்பு இல்லை என்றும் சூது செய்கிறது.
துணைக்கு ஆரியம் உள்ளது. .
கண்கலங்கி நின்றால் நம் தமிழ்தாய்! உனக்கு நான் இருக்கிறேன் என்று. .
கள்ளக்கூடி நாயகன் பிடித்த பேனா. .
கருத்து மழை!கவி மழை!
கொட்டும் பேனா . .
கொட்டிய மழையில் ரோமாபுரிப் பாண்டியர்கள் பிறந்தார்கள்.
தமிழ் காக்க தொல்காப்பிய பூங்கா பிறந்தது..
தமிழுக்கு அரனாய் . .
தமிழ் சுவையே உலகிற்கு ஊட்டி! திராவிட உணர்வை தட்டி எழுப்பி! இந்திக்கு எதிராய் . .
தமிழ் காக்கும் தளபதியாய் நின்று.
தமிழுக்கு மன்றங்கள்
தமிழ் கலைஞர்களின் படைப்புகள் நாட்டுடைமை.
பள்ளி எங்கும் தமிழ் கட்டாயம் . .
தமிழ் படித்தோர்க்கு பணிகளில் முன்னுரிமை தந்த தென்னாட்டு சிற்பி!!
நவீன தமிழகத்தின் தந்தை! !
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு !!
அண்ணாவின் அரசியல் வாரிசு!!
என்றும் எப்போதும் தமிழுக்காய் வாழந்து. .
நம் நெஞ்சமெல்லாம் கரைந்து ஒவ்வொரு திசுவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் .
நம் தமிழ் உலகக் காவலர்!
தாய்க்கு பெருமை சேர்த்த தங்கமகன் ஆம் தாயே !
உமக்கு பெருமை சேர்த்த தங்கமகன்.
திராவிடர்களின் தந்தை தமிழ்நாட்டு வளர்ச்சியின் நாயகன் .
செம்மொழி காவலன் சமச்சீர் கல்வி நாயகன் .
நம் தலைவர் கலைஞர் புகழ் பாடி!!புகழ் பரப்பி என்றும் தமிழ் காப்போம்!!
தமிழ்தாயை வணங்கி நன்றி!!வணக்கம்!! தமிழ அவைக்கு. .