வேந்தனையும் !
உயிர் கொண்ட உலகையும்!
படைத்து!
நான் என்ற அடக்குமுறையால்
அடக்கப்பட்ட போதும் !
பெருந்தன்மையால் !
குறுகி !
பேரண்பால் இல்லம் பெறுகி !
ஞாயிற்றை மறந்து !
தன் சுற்றம் துறந்து !
செல்லுமிடம் சொர்க்கமாக்கும் ஞாயிறு !
மேலாண்மை அவள் சிறப்பு !
தன் வயிற்றை மறந்து
பிள்ளை பசி போக்கும் அமுதசுரபி!
பூட்டியாய் !
பாட்டியாய் !
தாயாய் !
சகோதரியாய் !
மகளாய் !
இல்லம் காக்கும்
காவல் தெய்வங்களுக்கு
மகளிர் தின வாழ்த்துகள்!
இரா.முத்து கணேஷ்
முதுகலை வேதியியல்ஆசிரியர்
நாடார் மேல்நிலைப் பள்ளி
கோவில்பட்டி
No comments:
Post a Comment