வெள்ளந்திச் சிரிப்பினிலே . .
உலகம் இயங்குதம்மா..
உன் கைக்கும் வியர்வைக்கும் மந்திரசக்தி
இருக்கும்மா. .
மனிதன் கால்பட்டால்
புல்தரையும் கட்டாந்தரை
ஆகுதம்மா. .
உன் கால்பட்டு வெற்றுநிலமும் காய் கனி தந்து உலகுக்கு தாய் ஆகுதம்மா . .
உலகம் மறந்த தெய்வமே !!
உம் உழைப்பாலே எம் பசி போகுது. . .
நன்றி கடன் தீர்க்க
உன் மகனாய் பிறப்பேன் அம்மா. .
- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி
No comments:
Post a Comment