*வீட்டில் 21*
ஆறறிவு என்ற கர்வம்
ஓர் அறிவு தொடுத்த போரில்
யானைக்கும் அடிசறுக்கும் என புரிந்தோம்!
தனித்திருந்த வீடுகள் !
குவிந்திருந்த மணித்துளிகள் !
இல்லம் நிறைந்த பாசமழைகள் !
காவலாய் நின்றது ! சாதியல்ல !
காவல் சுகாதார மருத்துவ தெய்வங்கள் !
எறும்புகள் கற்றுத் தந்த சேமிப்பை
தவறாய் புரிந்து
பதுக்கினர் நுகர்பொருள்
உயர்த்தினர் விலை !
ஏழை வயிற்றை சுரண்டி
சேர்த்தார் பொருள் !
அவன் உண்பதும் உணவுதானே!
கொல்லை விலை விற்று
கொரோனா விட
பெரும் கிருமியானான். .
தப்பி பிழைக்க
வீட்டில் இருப்போம் தம்பி !
இன்றைய தேவை பொருளல்ல உயிர் !
நமது தலைமுறை.
*இரா.முத்து கணேஷ்*
*முதுகலை வேதியியல்ஆசிரியர்*
*நாடார் மேல்நிலைப் பள்ளி*
*கோவில்பட்டி*
புலனம் -9944468677
No comments:
Post a Comment