Tuesday, March 17, 2020

புதுயுகம் படைப்போம்

புத்தக சோலையில் நீராடி !
கவிதைகளால் பாச்சூடி !
இலக்கண இலக்கியங்களால் பூச்சூடி !
புதுயுகம் படைப்போம்.

உழைத்து காக்கும் உழவரும் !
நாணயமாய் வாழும் பாட்டாளியும் !
குயவரும் நெசவரும் !
காப்பாளியும் கல்வியாளரும் !
மதிப்பு காண புதுயுகம் படைப்போம்.

நித்தம் கண்விழித்து !
உடல் வருத்தி உழைத்து !
சேர்த்த பொருள் காத்து !
மகிழ்வும் உடல்வளமும் பூத்து !
சுரண்டி வாழ்வோர் வெறுத்து !
புதுயுகம் படைப்போம்.

மூடபோதனை ஒழித்து !
சாதி பேதம் எரித்து !
உழைப்பை மதித்து !
அறிவை வளர்த்து !
அகந்தை துரத்து !
பட்டறிவோடு பகுத்தறிவு சேர்த்து !
அன்பால் புதுயுகம் படைப்போம்.

- இரா.முத்து கணேஷ்
ஆசிரியர்
கோவில்பட்டி.

No comments:

Post a Comment