இரத்தம் சிந்தி நாடுகாத்த
மறவனுக்கு நடுகல் நம் வரலாறு!
காப்பு செங்கீரை தாலம் சப்பாணி
முத்து வருகை அம்புலியில்
பொதுவாகி அம்மானை நீராடல் ஊசலில்
மாதுவாகி மண்வாசனை காத்து
குலம் காத்து மணந்தாள் !
நற்குணமாது நீர்வாகியானாள்
மழலையாய் இருந்தவாள் மழலை சுமக்கிறாள்!
உண்பாள் உள்ளிருக்கும் உயிர் துப்பும்
வாந்தி ! தலைசுற்றல் ! முதுகுவலி
அரசனோ ? அரசியோ ? என மகிழ்ந்து வலி ஏற்பாள்.
அந்நாள் வந்தது வைரம் ஈன்றாள்
அவள் உயிர்காத்த உதிரத்தையும்
மரண வாசல் சென்ற நங்கை
மழலை கண்டு மன்னுலகம் கண்டாள்.
மங்கையே உமக்கு நடுகல் பெருமையன்றோ?
ஆனால் நீ விரும்பியது
தாய்மை எனும் இனிமை